பாகுபலி புகழ் பிரபாஸ் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளார். ‘பிரபாஸ் 20’ திரைப்படத்தின் படப்பிடிப்பினை ஜோர்ஜியாவில் முடித்து படக்குழுவினர் பத்திரமாக இந்தியா திரும்பிய நிலையில் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார் பிரபாஸ்.
இது குறித்து நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டதாவது,
வெளிநாட்டு படப்பிடிப்பை பத்திரமாக முடித்துத் திரும்பியுள்ள நிலையில் கோவிட்-19 பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு நானே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நீங்கள் அனைவரும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.