Thursday 28th of March 2024 06:13:49 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா சிகிச்சைக்கு தன்னுடைய வீட்டை கொடுக்க முன்வந்த பார்த்தீபன்!

கொரோனா சிகிச்சைக்கு தன்னுடைய வீட்டை கொடுக்க முன்வந்த பார்த்தீபன்!


உலகம் பூராவும் கொரோனா அச்சுறுத்தல் தலைவிரித்தாடி வரும் நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டை கொரோனா சிகிச்சை மையமாக்குவதற்கு வழங்கத் தயார் என நடிகர் பார்தீபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்தீபன் விடுத்துள்ள காணொளிப் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இப்படி உலகம் முழுக்க இந்த நோய் பரவி வருகிறது. 24 மணிநேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது.

24 மணிநேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே உருவாக்கவேண்டும். செந்தமாக இரண்டு வீடுகள் இருந்தால் அதில் ஒன்றை இந்த கொரோனா மருத்துவமனையாகக் கொடுக்க முன்வரலாம். என்னிடம் 3 பிளாட் உள்ளன, அதையும் கொடுக்கத் தயார்.

அதேபோல தெருவுக்கு தெரு இப்படிப்பட்ட மருத்துவ வசதி செய்து கொள்வது பெரிய உதவியாயிருக்கும் என்று அவர் இப்பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.


Category: சினிமா, பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE