Wednesday 24th of April 2024 04:21:07 AM GMT

LANGUAGE - TAMIL
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்கள்
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்தோர் 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்தோர் 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு!


வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துக்கொண்டுள்ளனர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவர்கள் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்படும் வரை இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருகை தந்தவர்களை பதிவு செய்வதற்கு இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததோடு பதிவு செய்யாதவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தனிமைப்படுத்தலில் இருந்து இடைவிலகியோர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதற்கமைய இன்று நண்பகல் 12 மணி வரை பதிவு செய்துகொண்டவர்களின் விபரங்களுக்கு அமைய 2913 இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE