தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 234 ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று உறுதி செய்யப்பட்ட 110 பேரும், நேற்று உறுதி செய்யப்பட்ட 47 பேரும் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டுக்கு சென்று திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு